மின்வாரியத்தில் 397 கோடி ஊழல்..!"செந்தில் பாலாஜி மட்டுமல்லாமல்..இவர்களும்.."அண்ணாமலை பரபரப்பு பேட்டி

x

டிரா ன்ஸ்பார்மர் கொள்முதலில் ஊழல் விவகாரத்தில், தொடர்புடைய அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில், டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 397 கோடி ரூபாய் அளவிலான மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். அமைச்சருக்கும், மின்சார வாரிய நிர்வாகத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாமல் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் உட்பட இதில் தொடர்புடைய மின்சார வாரிய பணியாளர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்