36வது தேசிய விளையாட்டுப் போட்டி - தமிழகத்தின் நிலை என்ன ?

x

தேசிய விளையாட்டு தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் தெலங்கானாவைச் சேர்ந்த முன்னணி வீரர் சாய் பிரனீத் தங்கப் பதக்கம் வென்று உள்ளார். இறுதிப் போட்டியில் கர்நாடக வீரர் மிதுனை 21க்கு 11, 12க்கு 21, 21க்கு 16 என்ற செட் கணக்கில் சாய் பிரனீத் வென்றார். இதேபோல், மகளிர் பேட்மிண்டனில் சத்தீஷ்கர் வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப், மகாராஷ்டிர வீராங்கனை மாள்விகாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ஹரிஹரன்-ரூபன் ஜோடி, கேரளாவின் ரவிகிருஷ்ணா-சங்கர் ஜோடியிடம் தோல்வி அடைந்து வெள்ளி வென்றது.


Next Story

மேலும் செய்திகள்