"350... சொல்லி அடிப்போம்"

x

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இம்முறை 350 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டார்.

பா.ஜ.க நாடாளுமன்ற கட்சி குழு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,

கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம் தோறும் மூவர்ணக் கொடி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், தமது ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, முதலாவது ஆட்சிக்காலத்தைவிட 2வது ஆட்சிக்காலத்தில் கூடுதல் இடங்களில் பெற்றதாக குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரட்டும் என்று தெரிவித்த பிரதமர், இம்முறை 350 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்