சென்னை ஏர்போர்ட்டில் 3.5 கி. தங்கம் பறிமுதல் - வசமாக சிக்கிய 4 பேர்

x

அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த 4 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாதித்தனர். 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். இதில், அவர்களிடம் இருந்து 1 கோடியே 83 லட்சம் மதிப்பிலா 3 கிலோ 422 கிராம் தங்கம், 25 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள், லேப்டாப்கள், சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், 4 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்