தமிழகத்தில் 32 ஐ.ஏ.எஸ். திடீர் இடமாற்றம்...இறையன்பு அதிரடி உத்தரவு

x

தமிழகத்தில் 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழக மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், வேளாண்மை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, நிதித்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, சர்வசிக்‌ஷ் அபியான் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சிரேயாசிங், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அதிகாரி இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்