3 வருட காதல்... கம்பி நீட்டிய காதலன்... காவல் நிலைய படியேறிய காதலி - கடைசியில் சிரித்த முகத்தோடு தாலி கட்டிய காதலன்

x

திருமணம் செய்ய மறுத்த காதலனை, காதலி போலீசில் புகாரளித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் அபிராமி. இவர் காஞ்சிபுரம் அடுத்த வடக்கல்பாக்கம் பகுதியை சேர்ந்த அருள்குமார் என்பவரை மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் இரு வீட்டாருக்கும் தெரிந்த படியே காதலித்த நிலையில், அருள்குமாருக்கு அவருடைய தயார் வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அருள்குமாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அதிர்ச்சியடைந்த அபிராமி போலீசில் புகாரளித்துள்ளார். இதில், அருள்குமாரை காவல்நிலையம் அழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, 3 வருடமாக அபிராமியை காதலித்து வந்ததை ஒப்புக்கொண்ட அருள்குமார் அவரை திருமணம் செய்யவும் சம்மதம் தெரிவித்த நிலையில், விருத்தாசலம், எம்ஜிஆர் பகுதியில் உள்ள கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்