3 வயது சிறுமியை மூதாட்டி தாக்கிய சம்பவம் - வீடியோ வெளியாகி பரபரப்பு

x

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, 3 வயது சிறுமியை மூதாட்டி கொடூரமாக தாக்கிய சம்பவம் குறித்து, குழந்தைகள் நல அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, வர்க்கலா வெட்டூர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி சரசம்மா. இவர் தனது பேத்தியான 3 வயது சிறுமி, பள்ளிக்கு செல்ல மறுத்ததால், சரசம்மா தடியால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அந்தப் பகுதிக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்