தொடரும் ஹிஜாப் போராட்டங்கள் - 2 நாளில் 3 பத்திரிகையாளர்கள் கைது

x

ஈரானில் இரண்டு நாட்களில் 3 பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இளம்பெண் மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்த போது மர்ம மரணம் அடைந்தார். அவரது இறப்பிற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் சில ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 48 மணி நேரத்தில், மெலிகா ஹஷேமி, சைதே ஷஃபி மற்றும் மெஹர்நூஷ் ஜரேய் ஆகிய 3 பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் மூவரும் இதர போராட்டக்காரர்கள் அடைக்கப்பட்டுள்ள எவின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஹிஜாப் போராட்டங்கள் துவங்கியது முதல் இதுவரை 80 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்