ஹெட்மாஸ்டர் மீதான கோபத்தில் 159 பேர் உயிரோடு விளையாடிய 3 மாணவர்கள் - கதிகலங்கிப்போன கரூர் கலெக்டர்

x

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே வீரணம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 159 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அன்று இரவு மர்மநபர்கள் பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள 3 குடிநீர் தொட்டிகளில் திரவ சோப்பு ஆயிலை கலந்து சென்றனர்.

இதனால் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் உடனடியாக பள்ளி வளாகத்தில் இருந்த 3 குடிநீர் தொட்டிகளை அகற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அதே பகுதியை சேர்ந்த ரோகித், கோகுல், பூபதி ஆகிய 3 சிறுவர்கள் குற்றத்தை ஒப்பு கொண்டனர். 3 பேரையும் தலைமை ஆசிரியர் திட்டியதால் கோபத்தில் எண்ணெயை கலந்து விட்டதாக, சிறுவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து 3 சிறுவர்களையும் கைது செய்த போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்