உல்லாசமாக இருந்ததற்கு பணம் கேட்டதால் பெண்ணை கொடூரமாக கொன்ற 3 பேர்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் தபால்மேடு பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண், கடந்த 4 நாட்களுக்கு முன் வனப்பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை, தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து அம்பிகாவிடம் உல்லாசமாக இருந்ததும், அதற்கு அவர் பணம் கேட்ட நிலையில், தர மறுத்ததால் அவர் செல்போனை பிடுங்கியதாகவும் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் அம்பிகாவை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்த நிலையில், அங்கேயே உடலை விட்டுவிட்டு தலைமறைவு ஆனதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்