சென்னையை அதிரவைத்த 3 சிறுவர்கள்.. கிண்டல் செய்ததால் நிகழ்த்திய பயங்கரம்

x

கொடுங்கையூரில் முன் விரோதம் காரணமாக இளைஞரை கத்தியால் வெட்டிய, 3 சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூரை சேர்ந்த விஷால் என்பவரை, கும்பல் ஒன்று கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில், படுகாயம் அடைந்த விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், விஷால் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அபினேஷ் என்பவரை கிண்டல் செய்த‌தாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அபினேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து விஷாலை தாக்கியது தெரியவந்த‌து. இதையடுத்து, அபினேஷ், அவரது நண்பர் ராஜேஷ் மற்றும் 16 வயது சிறுவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்