23 பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் - பிரபல செல்போன் கம்பேனியில் பரபரப்பு

x

காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 23 பெண் தொழிலாளர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலாஜாபாத்- சுங்குவார்சத்திரம் கூட்டுச்சாலை அருகே உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆறாயிரம் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்றிரவு கேண்டீனில் உணவு சாப்பிட்ட தொழிலாளர்கள் 23 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

அவர்கள் அனைவரும் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கேண்டீன் ஒப்பந்ததாரரிடம் போ​லீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்