22 பேர் உயிரை பறித்த படகு விபத்து - காவல்துறை வெளியிட்ட தகவல்

x

கேரளாவில் 22 பேரை பலிகொண்ட படகு விபத்து தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மலப்புரம் மாவட்டம் தனூரில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து, 15 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், படகு உரிமையாளர் நாசர் மற்றும் படகு ஓட்டுநர் தினேசன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், விபத்துக்குள்ளான படகை இயக்கிய உதவியாளர்கள் அப்பு, அனி, பிலால் ஆகியோரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, 22 பேர் பயணம் செய்ய வேண்டிய படகில், 37 பேர் பயணம் செய்த‌தே விபத்துக்கு காரணம் என்றும், படகு ஓட்டுநரிடம் உரிமம் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்