2000 ரூபாய் நோட்டு - பாஜகவுக்கு கேள்வி எழுப்பிய கே.எஸ்.அழகிரி

x

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸார், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஜோதி ஏற்றி அஞ்சலி செலுத்தி, நினைவு தின உறுதிமொழி ஏற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ஏழு லட்சம் கோடி ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், 3 லட்சம் கோடி தான் திரும்ப வந்துள்ளதாகவும், மீதமுள்ள 4 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே? என்றும் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்