"2000 ரூபாய் நோட்டு செல்லாது".. தொழிலதிபரிடம் சுங்கச்சாவடி ஊழியர் தகராறு..

x

கோவை அருகே உள்ள சுங்கச்சாவடியில், சுங்கசாவடி ஊழியர் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கணியூர் சுங்கச்சாவடியில் தொழிலதிபர் ஒருவர், கட்டணம் செலுத்துவதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அளித்துள்ளார்.

அப்போது சுங்கச்சாவடி ஊழியர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என கூறி வாங்க மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பொதுமக்கள் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என தெரிவித்தது யார் என சுங்கச்சாவடி ஊழியரிடம் கேள்வியெழுப்பினர்.

இதனையடுத்து சுங்கச்சாவடி ஊழியர் 2000 ரூபாய் நோட்டை பெற்று கொண்டார். இந்த சம்பவத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்