Doctor வீட்டில் 200 சவரன் அபேஸ்..கைவரிசை காட்டிய திருடர்கள்..திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு

x

திருத்துறைப்பூண்டியை சேர்ந்த டாக்டர் பிரேம்குமார் தாமஸ், குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக இவர் சென்னை வந்துள்ளார். இந்நிலையில், பிரேம்குமார் தாமஸ் வீட்டை சுத்தம் செய்வதற்காக சென்ற ஊழியர் செல்வி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மருத்துவருக்கும், திருத்துறைப்பூண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

போலீசார் அங்கு வந்தபோது, வீட்டின் வாசல் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் வீடு முழுவதும் சிதறிக் கிடந்தன. கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்