சென்னையின் முக்கிய சாலையில் 20 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்: பீதியில் மக்கள்

x

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமடையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் தருவாயில் இருந்த நிலையில், பேரக்ஸ் சாலையில் நேற்று சுமார் 20 அடி நிளம்,15 அடி அகலம் 20 அடி ஆழம் கொண்ட திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக வந்த காவல்துறையினர், அந்தப் பகுதி முழுவதுமாக தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்