காவல் நிலையத்திலேயே பெண் SI-யின் தலை முடியை பிடித்து தாக்கிய 2 பெண்கள் - சென்னையில் பரபரப்பு

x

சென்னை அசோக்நகர் காவல்நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை, இரண்டு பெண்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அந்தோணி சவரி பிச்சை என்பவர், இருசக்கர வாகனத்தை சென்றபோது, இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த பெண்கள் மோதுவது போல் சென்றுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் இரு பெண்களும் அந்தோணியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது வாகனத்தின் சாவியை பறித்துள்ளனர். இதனையடுத்து, இது குறித்து புகாரளிக்க அசோக் நகர் காவல் நிலையத்திற்கு அந்தோணி செல்ல, அவரை பின் தொடர்ந்து அப்பெண்களும் சென்றுள்ளனர். அங்கு அந்தோணிக்கும் அப்பெண்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது அவர்களை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளர் ஹேமலதா, காவலர்கள் ராணி மற்றும் ராம்குமார் ஆகியோரை, இரு பெண்களும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து சோனா, பிரியா என்ற அந்த இரு இளம்பெண்களையும் போலீசார் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்