கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் - வெளியான டிஎன்ஏ ரிப்போர்ட்

x

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட இரு பெண்களின் உடல்களும் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் உடல்கள் உறவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவில் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட இரு பெண்களின் உடல்களும் பல துண்டுகளாக வெட்டப்பட்டதால் அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் எழுந்தது. இதனால் அந்த உடல்களை உறுதி செய்யும் விதமாக உறவினர்களிடம் இருந்து டிஎன்ஏ சோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டன. திருவனந்தபுரம் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்தபோது உயிரிழந்தவர்கள் பத்மா மற்றும் ரோஸ்லின் ஆகியோர்தான் என உறுதி செய்யப்பட்டது. கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் உள்ள இருவரின் உடல்களும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்