இம்ரான்கானுக்கு 2 வாரம் ஜாமீன்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான், கடந்த 9ஆம் தேதி இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு சென்றபோது துணை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அல்காதிர் அறக்கட்டளை விவகாரத்தில் அரசுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியானது. இதை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான்கான் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து இம்ரான்கானுக்கு 2 வாரங்கள் ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்