+2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்..தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி

x

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள தவுட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கீர்த்திகா. இவர் கண்ணனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அண்மையில் அரசு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இந்த தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்