3 நாட்களில் அடுத்தடுத்து 2 கைதிகள் உயிரிழப்பு - புழல் சிறையில் அதிர்ச்சி

x

போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சாகுல் மீரான் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று அதிகாலையில் சாகுல் மீரானுக்கு நெஞ்சு வலியும், மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், சிறைத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சாகுல் மீரான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினமும் சீனிவாசன் என்ற கைதி உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில் அடுத்தடுத்து 3நாட்களில் 2 கைதிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்