ராணி வளர்த்த 2 செல்ல நாய்கள்... அவர்கிட்ட ஏன் கொடுக்குறீங்க?... கொந்தளிக்கும் மக்கள்

x

ராணி எலிசபெத் வளர்த்து வந்த இரு செல்லப்பிராணி நாய்கள், இளவரசர் ஆண்ட்ரூவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எலிசபெத், ராணியாக இருந்த காலத்தில் 30 நாய்களை வளர்த்துள்ளார்.

கணவர் பிலிப் காலமான பிறகு, தனது மகன் ஆண்ட்ரூவிடமிருந்து இரண்டு நாய்களை பரிசாக பெற்ற ராணி எலிசபெத் அதனை வளர்த்து வந்தார்.

தற்போது ராணி காலமான நிலையில், அவர் வளர்த்து வந்த நாய்கள் இளவரசர் ஆண்ட்ரூவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர், ஆதரவாகவும் ஒரு சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

62 வயதான இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் உள்ளதால், இது தற்போது பேசு பொருளாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்