தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர்..காவலரின் சட்டையை பிடித்து தகராறு - தீயாய் பரவும் பரபரப்பு காட்சி

x

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, மாரியம்மன் கோவில் நிலத்தில் சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்த வழக்கில் கோவில் இடத்தை நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் நில அளவீடு செய்தபோது, சுப்பிரமணியன் மற்றும் அர்ச்சுனன் ஆகியோர் தாசில்தாரை பணிசெய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை மிரட்டல் விடுத்த இருவரையும் கைது செய்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலரின் சட்டையைப் பிடித்து இழுத்து, ஒருவர் தகராறு செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்