2 ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரம் பறிப்பு - ஆட்சியர் அதிரடி உத்தரவு | Kanchipuram

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் அமுதன் மற்றும் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் ஆகியோரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி சட்ட விதிகளை மீறியதை தொடர்ந்து 2 பேரின் அதிகாரங்களை பறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் வரவு செலவு வங்கி கணக்குகளை நிர்வகிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கியும் ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்