அரசுப் பள்ளியில் 2 மணி நேரம்.. - ஆசிரியராக மாறிய ஆட்சியர்...காரைக்காலில் நெகிழ்ச்சி சம்பவம்

x

காரைக்காலில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பயின்ற 10,12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து காணப்பட்டது. அரசு பள்ளியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் குவிந்த நிலையில், ஆட்சியர் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் திடீரென்று ஆய்வு செய்து ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என்று கண்காணித்ததுடன், மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அத்தோடு நிற்காமல் தினந்தோறும் கிராமப்புற பள்ளிகளுக்கு சென்று 2 மணி நேரம் பாடம் நடத்தி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இன்று அம்பகரத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவ மாணவிகளுக்கு இயற்பியல் பாடத்தில் ராமன் விளைவு பற்றி பாடம் நடத்தி அசத்தினார் ஆட்சியர். ஆட்சியர் குலோத்துங்கனின் அரசுப் பள்ளிகள் மீதான அதீத அக்கறை பாராட்டுகளைக் குவித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்