துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய 2 சிறுமிகள் துடிதுடித்து பலி - சிப்காட் அருகே பயங்கரம்

x

ராணிப்பேட்டை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 சிறுமிகள் உயிரிழந்தனர். சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவர் ஆந்திரா மாநிலத்தில், துக்க நிகழ்விற்கு சென்றுவிட்டு காரில் சென்னை திரும்பியுள்ளார். அப்போது ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 2 சிறுமிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்