15 நாட்களாக வீட்டில் அடைப்பட்ட 2 நாய்கள், பத்திரமாக மீட்ட கால்நடை அதிகாரிகள்

x

மதுரை ஆரப்பாளையம் பகுதியில், வீட்டில் 15 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த 2 நாய்களை, மாநகராட்சி கால்நடை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். ராமலட்சுமி என்பவரின் வீட்டில், வாடகைக்கு குடி இருந்த கஸ்தூரி என்பவர், கடந்த 8 ஆம் தேதி, வீட்டை காலி செய்துள்ளார். ஆனால், வளர்த்து வந்த 2 நாய்களை, வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு கஸ்தூரி சென்றுள்ளார். நாய் குறைப்பதும், துர்நாற்றம் வீசுவதையும் அறிந்த ராமலட்சுமி அளித்த புகாரின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் வந்து, 2 நாய்களையும் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்