விடுதியில் 2 கோடி பாம்பு விஷம் - அதிர்ந்த போலீஸ் | Kerala

x

கேரளாவில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு சிலர் பாம்பு விஷத்தை கடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பத்தனம் திட்டா போலீசார் கொண்டேட்டி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தங்கியிருந்த 3 பேர் குடுவையை சோதனை செய்தபோது, அதில் பாம்பு விஷம் இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொன்னியை சேர்ந்த குமார், பிரதீப் நாயர் மற்றும் கொடுங்க ல்லூர் பஷீர் என தெரிய வந்தது....


Next Story

மேலும் செய்திகள்