பம்பை ஆற்றில் 2 சிறுவர்கள் பலி..! விழுப்புரத்தில் நிகழ்ந்த சோகம் | Boys | Pambai | Villupuram

x

விக்கிரவாண்டி அருகே பம்பை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பனாம்பட்டை சேர்ந்த உதயா மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய இரண்டு சிறுவர்கள், அகரம் கிராமத்தில் உள்ள பம்பை ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கினர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்