தனியார் கல்குவாரியில் மண் சரிவு - பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞர் |

x

புதுக்கோட்டை மாவட்டம் ராக்கத்தான்பட்டி கிராமத்திலுள்ள தனியார் கல்குவாரியில், மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குவாரியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்த லெட்சுமணன் என்பவரும், அவருக்கு உதவியாளராக பணிபுரிந்த முத்துக்குமார் என்பவரும் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில் முத்துக்குமார் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், நீண்ட நேரம் போராடிய போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் லட்சுமணனை சடலமாக மீட்டனர். இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல முயன்ற, போலீசாரை தடுத்த லட்சுமணனின் உறவினர்கள், இழப்பீடு கோரி கல்குவாரியின் பாதையை முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னத்துரை, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து லட்சுமணனின் உறவினர்கள் முற்றுகையை கைவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்