18 ஆண்டுக்கு முன் இறந்த தாயை காண விபரீதத்தை தேடிக்கொண்ட மகன் - தாய்ப்பாசமே எமனாக மாறிய சோகம்

x

இறந்துபோன தாயை காண வேண்டும் என கூறிவந்த நிலையில், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜி என்பவர், தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக 18 வருடங்களுக்கு முன்பு இறந்துபோன தனது தாயை பார்க்க ஆவலாக உள்ளதாக, வீட்டில் உள்ளோரிடம் ராஜி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் ராஜி சடலமாக மீட்கப்பட்டார். ராஜியின் உடலை பெற்றுக் கொண்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்