17 வயது இளைஞரை மதுபாட்டிலால் குத்தி கொன்ற நண்பர்கள்

x

விருதுநகரில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் 17 வயது இளைஞரை, அவரது நண்பர்கள் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளனர்.விருதுநகர் அருகே ரோசல்பட்டி, அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. 17 வயதான இவர், ட்ரம்ஸ் அடிக்கும் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரம்ஸ் அடிப்பதில் நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த முத்துப்பாண்டியுடன், அவரது நண்பர்கள் அஜித், விஜய் மற்றும் தனுஷ் ஆகியோர் தகராறு செய்தனர். இதில், மூவரும் மதுபாட்டிலால் முத்துப்பாண்டியை குத்தி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் மூவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்