மர்ம விலங்கின் பசிக்கு - பலியான செம்மறி ஆடுகள் | erode

x

பவானி அருகே விவசாய தோட்டத்தில் அடையாளம் தெரியாத விலங்கு கடித்ததில் 17 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. ஈரோடு மாவட்டம், குருவரெட்டியூரை சேர்ந்த விவசாயி சக்திவேல், தனது தோட்டத்தில் பட்டி வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு, அங்கு வந்து பார்த்தபோது, கழுத்து மற்றும் மடி பகுதிகளில் கடிப்பட்டு 17 ஆடுகள் இறந்து கிடந்ததன. சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் வனத்துறையினர், ஆடுகளை செந்நாய் அல்லது சிறுத்தை கடித்து கொன்றதா என்று விசாரித்து வருகின்றனர். 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகள் உயிரிழந்ததால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயி, கோரிக்கை எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்