பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கியெழுந்த 154 பயணிகள் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு

x

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து சீரடிக்கு தனியார் பயணிகள் விமானம் பிற்பகல் 2: 20 மணிக்கு புறப்பட்டுச் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய 154 பயணிகள் காத்து இருந்தனர். ஆனால் விமானம் காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தனியார் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகளிடம் சமரசம் செய்தனர். பின்னர், சென்னையில் இருந்து நேரடியாக சீரடி செல்ல விரும்பும் பயணிகள் வெள்ளியன்று விமானத்தில் செல்லலாம் என கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்