போலீசார் தாக்குதலில் 15 வயது ஈரானிய பள்ளி மாணவி மரணம் - ஈரானிய ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

x

15 வயதேயான ஈரானிய பள்ளி மாணவி பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக ஆசிரியர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட மாஷா அமினி என்ற இளம்பெண், கவால்துறையினர் தாக்கியதில் மரணம் அடைந்தார்.

மாஷாவின் இறப்புக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில், அர்டபில் நகரிலுள்ள ஷகித் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்தை போலீசார் கலைக்க முற்பட்டனர்.

அப்போது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் அஸ்ரா பனாஹி என்ற 15 வயது மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஈரானிய ஆசிரியர் சங்கம் இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்