காவிரி ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு

x

பவானியை அடுத்த மாயவரத்தை சேர்ந்த செந்தில் - கீதா தம்பதியின் மகன் ரோகித், விடுமுறைக்காக தனது பாட்டி வசிக்கும் மாயவரத்துக்கு வந்துள்ளார்.

ரோஹித் அந்தப் பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன் மாயவரத்தில் உள்ள காவிரி ஆற்றுப் பகுதிக்குச் சென்றபோது, கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளார். கரையில் இருந்த நண்பர்கள் கூச்சலிட்டதால் அந்தப் பகுதியில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தவர்கள், ஆற்றில் இறங்கி தேட முயன்றபோது சிறுவன் கிடைக்கவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சிறுவனின் உடலை மீட்டனர். சித்தோடு போலீசார், சிறுவனின் உடலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்