தமிழில் 100-க்கு 138 மதிப்பெண்.. தமிழகத்தையே பரபரப்பாக்கிய +2 மாணவி மார்க் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

x

மதுரை சூரக்குளத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு தவறாக வந்த மதிப்பெண் பட்டியல் திருத்தி வழங்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த சூரக்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவிக்கு 138 மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் 70க்கு மேல் மதிப்பெண்களும் வழங்கப்பட்டு தேர்ச்சி பெறவில்லை என முடிவு வந்தது. இது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தேர்வுக்கு மாணவி விண்ணப்பித்த போது பழைய பாடத்திட்டத்திற்கு பதிவு செய்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருந்ததாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டதன் பேரில் இன்று மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அந்த மாணவிக்கு பொதுத்தேர்வு முடிவுகளை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்