அடித்த லக்..லம்ப்பாக விழுந்த 12 கோடி.. ஒரே நாளில் கோடீஸ்வரராகியவர் வைத்த உருக்கமான ரகசிய வேண்டுகோள்

x

கேரளாவில் அரசு லாட்டரியில்12 கோடி ரூபாயை வென்ற நபர் தனது பெயர், விபரங்களை வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் வங்கியில் பணத்தை பெற்றுச் சென்றார்.

கேரள லாட்டரியில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த குலுக்கலில், முதல் பரிசாக அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 12 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அந்த நபர், பரிசு விழுந்த டிக்கெட்டை யாருக்கும் தெரியாமல், மிகவும் ரகசியமாக கோழிக்கோட்டிலுள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். 2 நாட்களுக்கு முன் கேரள லாட்டரித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தனது பெயர் மற்றும் விவரங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதோடு, கோழிக்கோட்டிலுள்ள வங்கி மேலாளரிடம் டிக்கெட்டை கொடுத்து, கமிஷன் மற்றும் வரி நீங்கலாக 7.58 கோடி ரூபாய் பணத்தை பெற்று சென்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்