நடுவழியில் இறக்கிவிட்ட பள்ளி வாகன ஓட்டுநர்.. +1 மாணவி எங்கே போனார்? - 11 நாட்களாக திணறும் போலீஸ்

x

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தனியார் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி, கடந்த 21 தேதி காலை பள்ளி வாகனத்தில் ஏறி சென்றுள்ளார். ஆனால், பள்ளி வாகன ஓட்டுநர் கார்த்திக், அவரை நடுவழியில் இறக்கி உள்ளார். இதைத் தொடர்ந்து, அதே பள்ளியின் ஓட்டுநரான அஜித், அந்தச் சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மாணவி இரவு 8 மணி வரை வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள், அரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதன் பேரில், நண்பனுக்கு உதவிய ஓட்டுநர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்த நிலையில், 11 நாட்கள் ஆகியும் மாணவியின் நிலை தெரியவில்லை.


Next Story

மேலும் செய்திகள்