இன்று தொடங்குகிறது 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... மாணவர்களுக்கு புதிய அப்டேட்

x
  • ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தேர்வுகளை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேர் எழுத உள்ளனர்.
  • தமிழ்நாட்டில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் எழுதுகின்றனர்.
  • தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 224 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது.
  • புதுச்சேரியில் 6 ஆயிரத்து 799 மாணவர்கள், 7 ஆயிரத்து 577 மாணவிகள் என 14 ஆயிரத்து 376 பேர் எழுதுகின்றனர்.
  • இவர்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 338 பேரும் தேர்வு எழுதவுள்ளனர்.
  • சிறைவாசிகள்125 பேர், வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் ஆகிய 8 சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்