பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

x
  • காஞ்சிபுரம் அருகே பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்த பதினொன்றம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியிடம், தேர்வு அறையில் தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
  • காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெற்றுள்ளது.
  • அதில், மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தனி அறையில் தேர்வு எழுதி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
  • அந்த அறையில், ஒரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் ஆசிரியரான ஜெகநாத் தேர்வு கண்காணிப்பாளாராக இருந்துள்ளார்.
  • அப்போது, மாணவிக்கு தேர்வு தொடர்பான விளக்கமளிப்பது போல் நடித்து, தவறாக நடந்து கொண்டதாக மாணவி பெற்றோரிடம் புகாரளித்துள்ளார்.
  • இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் போலீசில் புகாரளித்த நிலையில், போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
  • இதில், ஆசிரியர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவர, தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகநாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்