பறவைகள் மீது தீரா பற்று..199 வகை பறவைகளை ஆய்வு செய்து புத்தகத்தை எழுதி, வெளியிட்ட 11 வயது சிறுமி

x

நீலகிரி, மசினகுடி பகுதியை சேர்ந்த, மும்பையில் பிறந்த அனன்யா என்ற 11 வயது சிறுமிக்கு, சிறு வயதில் இருந்தே பறவைகள் மீது தீரா பற்று இருந்துள்ளது. இதை பற்றி ஆய்வு செய்த சிறுமி, தற்போது வரை 199 வகை பறவைகளை ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில், அதை புத்தகமாக வெளியிட முடிவு செய்த அவர், புத்தகத்தின் முதல் பாகத்தை எழுதி வெளியிட்டார். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், அந்த புத்தகத்தை வெளியிட்டார். மேலும், அடுத்த கட்டமாக இரண்டாவது பாகத்தையும் வெளியிட உள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். 11 வயதில் சிறுமி செய்த இந்த செயலுக்கு, வனத்துறை அதிகாரிகள் மற்றும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்