11 வயது சிறுவனை கடத்தி மிரட்டல் - என்கவுண்டர் செய்து மாஸ் காட்டிய போலீசார்

x

பணத்திற்காக கடத்தப்பட்ட 11 வயது சிறுவனை, 24 மணி நேரத்தில் மீட்ட கிரேட்டர் நொய்டா போலீஸ் குழுவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் 11 வயது சிறுவன் கடத்தப்பட்டதுடன், 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக சிறுவனின் தந்தை புகார் அளித்தார்.

அதனடிப்படையில் சிறுவனை மீட்கும் பணியில் கிரேட்டர் நொய்டா போலீசார் ஈடுபட்டனர்.

பணம் கேட்டு மிரட்டல் வந்த அழைப்பை கொண்டு விசாரித்த போலீசார், சிறுவன் இருக்கும் இடத்தை அடைந்தனர்.

அப்பொழுது, சிறுவனை கடத்தியவர்கள் துப்பாக்கியால் சுட்டதால், பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

அதில் குற்றவாளிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

துரிதமாக செயல்பட்டு சிறுவனை மீட்ட போலீஸ் குழுவை பாராட்டியுள்ள டிசிபி அபிஷேக் வர்மா, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்