பூசாரிக்கே "விபூதி" அடித்த மர்ம ஆசாமிகள்..11 பவுன் தங்க நகைகள் "அம்பேல்"

x

நெல்லை ஆவரைக்குளம் முத்தாரம்மன் கோயிலில் அர்ச்சனை செய்வது போல் நடித்து பூசாரியைத் திசை திருப்பி அம்மன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கோயிலுக்கு பக்தர்கள் வேடத்தில் வந்த மர்ம நபர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது போல் நடித்து பூசாரியை திசை திருப்பி உள்ளனர். அர்ச்சனைக்காக பூசாரி கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த போது, முத்தாரம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 11 பவுன் தங்க நகைகளுடன் அந்த ஆசாமிகள் தப்பி ஓடியுள்ளனர். கோயிலில் சிசிடிவி கேமரா செயல்படாமல் போனது திருடர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்