இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2023)

x

12 மணி நேர வேலை என்ற தொழிலாளர் சட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்...அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

12 மணிநேர வேலை மசோதா குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை.....அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் தலைமையில் 24 ஆம் தேதி கருத்துக்கேட்பு.....

இயற்கை பேரிடரை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது, பி.எஸ்.எல்.வி -சி 55 ராக்கெட்...ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது...

விருதுநகர் மாவட்டம்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து...பெண் ஊழியர் உடல் கருகி உயிரிழப்பு...

ஆடியோ தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்....அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம்...

தான் பேசியதாக வெளியான 26 நொடி ஆடியோ புனையப்பட்டது...தடயவியல் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

உண்மையை பேசியதற்காக கிடைத்த பரிசு தான் இது... எது நடந்தாலும் தொடர்ந்து உண்மையை பேசிக் கொண்டே இருப்பேன்...காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டம்...

எம்.பி., பதவி பறிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் அரசு ஒதுக்கிய வீட்டை காலி செய்தார், ராகுல்காந்தி...முறைப்படி வீட்டின் சாவியை அதிகாரியிடம் ஒப்படைத்தார்... ஊழியர்களுக்கு கைகுலுக்கி விடைபெற்றார்...


Next Story

மேலும் செய்திகள்