"2 ஆண்டுகளில் 11 லட்சம் பேர்..." - அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

x

கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் பேர் அரசுப் பள்ளியை நாடி வந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார். திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன், மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கையில், கொரோனா தொற்றின் காரணமாக 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை என்றும், அரசாணை 149 தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான முடிவு எடுக்கப்படும் போது போட்டி தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். சிஏஜி அறிக்கையின்படி கடந்த ஆட்சி காலத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் 515 பள்ளிகளின் தரம் உயர்த்தப் பட்டுள்ளதாகவும், உயர்நிலைப் பள்ளியில் சேரக்கூடிய மாணவர்கள் விகிதம் 11 சதவீதம் குறைந்திருந்ததாகவும், தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை 3.8 சதவீதம் அதிகரித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியை நாடி வந்துள்ளதாக சிஏஜி அறிக்கை குறிப்பிடுவதாக தெரிவித்த அவர், கடந்த ஆட்சி பள்ளிக் கல்வித் துறையை அலட்சியமாக நடத்தியுள்ளது என குற்றம் சாட்டினார். மத்திய அரசு பேனா சின்னம் அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்