11 -ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் - மருத்துவமனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

திருவண்ணாமலையில், 11ம் வகுப்பு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய, பள்ளி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆரணி அருகே வாழியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை, 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, மாணவி 8 மாத கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், 11ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்