CSK - குஜராத் போட்டிக்கு முன் சேப்பாக்கத்தில் 11 பேர் கைது - ஏன்?

x

ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்தும், கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்கள் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, சேப்பாக்கம், மைதானத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை போலீசார் கண்காணித்தனர். சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பில் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 11 பேரை கைது செய்த போலீஸ் 39 டிக்கெட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்