திடீரென வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் - இதுதான் காரணம்!!

x

அரக்கோணத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் உள்ளது. இங்கு வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடற்படை விமான தளத்தில் வீரர்களுக்கான ஹெலிகாப்டர் பைலட் பயிற்சியின் நூறாவது நிகழ்வு நடைபெற்றது. இதில், கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி பிஸ்வஜித் தாஸ் குப்தா கலந்துகொண்டு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது, 5 ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டது, பார்வையாளர்களைக் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்